தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்த செல்வசேகரின் உடலுக்கு பிரேத பரிசோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான செல்வசேகரின் உடல் நீதிபதிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதிகள் 4 பேர் முன்னிலையில், 6 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்திருந்த பொதுமக்களை லேசான தடியடி நடத்தியே போலீசார் விரட்டியடித்தனர்.

பொதுவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காரணமாக வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 நீதிபதிகள் முன்னிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு, பதப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...