சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டி மகளைக் காப்பாற்றிய தாய் : சிறுமி படுகாயம்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் மகளை தாக்க வந்த சிறுத்தையை, பெண் ஒருவர் கட்டையால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் மகளை தாக்க வந்த சிறுத்தையை, பெண் ஒருவர் கட்டையால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. இவைகள், அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. மேலும், மனிதர்களையும் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தையைக் கொன்ற சம்பவம் அப்பகுதியினரை உச்சக்கட்ட பீதியில் ஆழ்த்தியது. 



வால்பாறையை அடுத்த பெரியகல்லார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர் முத்துமாரி. இவருக்கு கணவர் இல்லை. தனது 11 வயது மகள் சத்தியாவை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை, சிறுமி சத்தியாவும் அவரது தாயும் சேர்ந்து தங்களது வீட்டின் பின்புறம் உள்ள விறகுகளை எடுத்து சமையல் அறையில் வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி திடீரென பாய்ந்து சத்தியாவின் கழுத்தை கடித்து தூக்கி உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துமாரி, சாதுர்த்தியமாக செயல்பட்டு, கையில் இருந்த விறகு கட்டையால் சிறுத்தைப்புலியை தாக்கி உள்ளார். இதனால், பயந்து போன சிறுத்தை வாயில் கவ்வியிருந்த சிறுமியை அங்கேய விட்டுவிட்டு தப்பியோடியது. 

படுகாயமடைந்த சிறுமி சத்தியாவிற்கு தேயிலை தோட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வால்பாறை நகரமன்ற துணைத்தலைவர் மயில்கணேசன் சத்தியாவின் தாயிற்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மேல்சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். சிறுமி மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...