மேட்டுப்பாளையத்தில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு தொடக்கம்: இயற்கையின் அழகை 'ஈகிள் வியூ' பார்வையில் கண்டுரசிக்க பொதுமக்கள் ஆர்வம்

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.


மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கையின் அழகை கண்டுரசிக்கும் வகையில் தேசிய விளையாட்டு கழகம் சார்பில் ராட்சத பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு இன்று தொடங்கியது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சாகச விளையாட்டு கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பலூன் மூலம் வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில், பங்கேற்று பலூனில் பறந்தபடி இயற்கை அழகை ரசிக்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இளம் வயதினருக்கு, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் மனதில் உள்ள தேவையற்ற அச்ச உணர்வைப் போக்கி, மனவலிமை கொண்டவர்களாக எந்த சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்ற இது போன்ற சாகச விளையாட்டுக்கள் உதவும் என நம்பப்படுகிறது. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு கோடை விடுமுறை காலங்களிலும் பலூன் மூலம் குறிப்பிட்ட உயரம் வரை வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் விளையாட்டு பூங்கா [பிளாக் தண்டர்] மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த சாகச விளையாட்டு இந்திய விமானப் படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே சீரான சீதோசனம் மற்றும் அளவான காற்று வீசும் பகுதிகளாக கருதப்படும் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே ஆண்டுதோறும் பலூன் திருவிழா மற்றும் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பாக துறைச் சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுவதால், இந்த சாகச விளையாட்டில் பங்கேற்று இயற்கையின் அழகை ஈகிள் வியூ எனப்படும் கழுகுப் பார்வையில் காண சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...