சமுதாய முன்னேற்றத்தில் தனிநபரின் பங்கு மிகவும் முக்கியம்: கடற்படை தளபதி லன்பா

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் நாள் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:- உங்கள் வாழ்வை பலர் உருவாக்கியதைப் போன்று, நீங்கள் பிறரிடம் அன்புடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும். வாழ்க்கை பிறருக்காக வாழவில்லையெனில், அது வாழ்க்கையல்ல என அன்னை தெரசா கூறியதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.



மாணவர்கள் இன்று இருக்கும் சுற்றுச்சூழல் நிந்தரமானது என எண்ணிவிடக் கூடாது. வாழ்க்கை என்பது பல்வேறு சவால்களைக் கொண்டது. சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக முதியவர்களுக்கு உதவுவதோடு நீங்கள் பெற்ற கல்வியறிவையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஹென்றி லாரன்ஸ் இப்பள்ளியை துவக்கிய காலம் முதல் பாதுகாப்பு துறைக்கும், இப்பள்ளிக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. இது மேலும் வளரும் என நம்புகிறேன். இப்பள்ளியில் படித்த பலர் வெண்ணிற ஆடை அணிந்து கடற்படையில் பணிபுரிவது எனக்கு பெருமையாக உள்ளது.



வரும் காலங்களில் உங்களில் பலர் பாதுகாப்பு படைக்கு சேருவீர்கள் என நான் நம்புகிறேன், என்றார்.

இறுதியாக, விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சுழற்கேடயங்களையும் அவர் வழங்கினார். பள்ளி தலைவர் தேசிராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...