பயணி மறந்து விட்டுச்சென்ற விலையுயர்ந்த பொருட்களை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், சுமார் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆட்டோவில் மாணவர்கள் சிலர் கடந்த 24-ம் தேதி பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு வீடு திரும்பிய செல்வராஜின் ஆட்டோவில் இரண்டு பைகள் இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, இரண்டையும் சோதனை செய்த போது ஒரு பையில் மடிக்கணினியும், மற்றொரு பையில் விலை உயர்ந்த கேமரா என சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளது.



இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத்தில் தகவலை தெரிவித்த அவர், சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் (உளவு பிரிவு) சௌந்திரராஜனிடம் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் பொருட்களை ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலை போலீசார் வெகுவாக பாராட்டியதோடு, உடைமைகளை இழந்தவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...