மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயக்குமார், சுகுணா தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயக்குமார், சுகுணா தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (42), பகுதி நேர ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம் திருமலை என்பவர், தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாக கூறி வீடு வாங்கி தருவகாக ரூபாய் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயக்குமார் அப்பகுதி மக்களிடமிருந்து வீடு வாங்கி தருவாக கூறி ரூபாய் 12 லட்சம் வரை பணம் பெற்று திருமலைக்கு கொடுத்துள்ளார்.

இதனிடையே, திருமலை அப்பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஜெயக்குமாரிடம் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர்.



இதனால் மன உளைச்சல் அடைந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் திருமலை குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மனைவி சுகுணாவிடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.



தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், சிகிச்சைக்காக அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...