ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி அலுவலர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரையை வங்கி ஊழியர் சங்கம் ஏற்கவில்லை. இதற்கு முன், கடந்த நவம்பர் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த ஊழியர் சங்கத்தினர், பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வங்கி ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றியதாகக் கூறினர்.

மேலும், கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் அளித்திருக்கும் பரிந்துரை போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைக் கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக 9 வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, இன்று (மே 30) மற்றும் நாளை அந்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.



ஏறத்தாழ 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இதில் பங்கெடுத்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு ஊழியர்களில் பெரும்பகுதியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ரூ.300 கோடி உள்பட நாடு முழுவதும் சுமார் ரூ. 2,000 கோடி வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் தாக்கம், பணப் பரிவர்த்தனைகளிலும், ஏ.டி.எம்., சேவைகளிலும் எதிரொலிக்கக்கூடும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...