ஒடிசா: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து: ஒருவர் பலி; 22 பேர் படுகாயம்

கட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

புவனேஷ்வர் - பாதர்க் பயணிகள் ரயில் கட்டாக் அருகே உள்ள ரயில் நிலையம் அருகே வந்தபோது, சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நாயக் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...