புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்


கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு, புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் "தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான உள்ளீடுகள்" என்ற தலைப்பில் கடந்த  ஜூன் மாதம் தனது இணையதளத்தில் ஆவணம் ஒன்றை வெளியிட்டது.



இந்த புதிய கல்விமுறை தாய்வழிக்கல்வியை பாதிக்கும் என்றும், சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிப்பதாகவும் கூறி புரட்சிகர மாணவர் முன்னணியினர், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உட்பட மொத்தம் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் பேசியதாவது:- 

சமஸ்கிருத மொழியை வெறும் 11 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை படிக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் தாய் மொழி தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையால் உயர்கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படும் அபாயமும் உள்ளது. "எங்களுக்கு தாய் மொழிக் கல்வியே போதும்" இக்கல்வி முறை எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தாய் மொழிக்கல்வியே போதும் என இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...