கோவை : மக்கள் நலக் கூட்டணியினர் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர்

மக்கள் நலக் கூட்டணியினர் கோவை மாநகராட்சியில் போட்டியிடம் இடங்களுக்கான தொகுதி பங்கீட்டீல் உடன்பாடு எட்டப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ,கோவை மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணியினர் போட்டியிடும் இடங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து 7 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 30 இடங்களிலும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி சார்பாக 32 இடங்களிலும் , மதிமுக சார்பாக 25இடங்களிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 13 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட ஒரு சில இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் , மற்று அனைத்து வேட்பாளர்களும் வருகின்ற 3 ஆம் தேதி போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...