மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை


ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது. உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி வெளியிடப்பட்டது.

புற்றுநோய்மையத்தின்இயக்குனரும், தலைமைமருத்துவருமானமருத்துவர்குகன்இந்தகருவியைபற்றிக்கூறுகையில்:

ஆண்டு தோறும் பிங்க் மாதம் என்று அழைக்கப்படும் அக்டோபர் மாதத்தில் உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்று நோய் சிகிச்சை மையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதுவரை மக்களிடையே 12000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக, மார்பகம் பற்றிய விழிப்புணர்வு கையேடு, இலவச மேமோகிராம், குறும்படம் வெளியிடுதல்,  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



தற்போது, இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கும் இன்று ஒரு புதிய சாதனையாக மார்பக புற்று நோய் பற்றிய பொதுமக்கள் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி, ஒரு பிங்க் நிறமான 8 ஜி.பி திறன் கொண்ட சிலிக்கான் யு.எஸ்.பி கைப்பட்டை ஆகும்.இது வளையல் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மார்பக புற்று நோய்  பற்றிய அதிவேகமான தெளிய இணையதள இணைப்பு, கைபேசி, அலைபேசியில், எளிதாக கொண்டு சேர்க்கக்கூடிய மொபைல் அப்பிளிக்கேஷன் இணைப்பு, பார்க்க புற்று நோய் பற்றிய வீடியோ, ஆரம்ப நிலையில் மார்பக கட்டிகளை பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்ப நிலையில் மார்பக புற்று நோய்களை கண்டறிதல் முக்கியத்துவம் வலியுறுத்தும் குறும்படம், இணையவழி புத்தகம் என்னும் மார்பக புற்று நோய்  பற்றிய தாவல் திரட்டு. 

இந்த கைப்பட்டையை இலவசமாக மகளிர் சுயஉதவிக்குழு, மகளிர் மன்றங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், கிராமப்புற மகளிர் மன்றங்கள், மகளிர் கல்லூரி ஆகிய அமைப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதோடு, வழக்கம்போல் இம்மாதம் இலவச மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் மேமோகிராம் போன்ற பரிசோதனை நடக்கும். புற்று நோயை முறியடிப்போம் என்றார். 

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...