கிராமப்புற மலைவாழ் மக்களிடம் இலவச பட்டா வழங்குவதாக கூறி மோசடி

கோவையில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு கிராமப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஈஷாவிற்கு அருகில் உள்ள மடக்காடு, தாணிக்கண்டி மற்றும் முள்ளாங்காடு ஆகிய கிராமப் பகுதிகளில் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஈஷா யோகா மையம் இப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்பு வசதி, கல்வி உதவி என அனைத்து உதவிகளும் செய்து வருகின்றனர். இப்படி ஈஷா யோகா மையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன்  கோவை பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர் தன்னை பத்திரிக்கை நிருபர் என்றும், உங்கள் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருவதாக கூறி எங்கள் பகுதி மக்களிடம் ரூ.2500 பணம் வாங்கிக்கொண்டு இதுவரைக்கும் வீட்டுமனை பட்டா வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் 43 ஏக்கர்  நிலத்தை ஈஷா அறக்கட்டளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. என்று பொய்புகார் அளித்து எங்களை பயன்படுத்தியுள்ளார். மலைவாழ் பழங்குடியினர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தன்னுடைய சுபலாபத்திற்காக எங்களை பயன்படுத்திய சிவசண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...