மாணவன் ஆற்றில் மாயம்: 2 நாள் கழித்து வழக்குப்பதிவு

ப.வேலூர்: ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில், நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் போது, மாயமான கல்லூரி மாணவனை, மூன்றாவது நாளாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஹரிஹரன், 18. இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், பி.டெக்., இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1ம் தேதி, தன் நண்பர்கள், ஆறு பேருடன், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தார். அவரது நண்பர்கள் கரைக்கு திரும்பிய நிலையில், ஹரிஹரன் மட்டும் கரைக்கு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்களின் உதவியுடன் மாணவனை தேடினர்.

பின், நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள், ப.வேலூர் காவிரி ஆற்றின் இருகரையோரங்களில், நான்கு பரிசல்களில் தேடினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...