ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் காலை அறிவியல் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் மகுடபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவிகளின் அணிவகுப்பினை ஏற்று மரியாதையை செய்தார். பின்னர், ஒலிம்பி  திபத்தினை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில்:
இன்றைய காலத்தில் பெண்கள் உடல்நலம் பேணுதல் மிக அவசியமான ஒன்று. பெண்கள் இல்லத்திலும், பணியிடத்தில் பல்வேறு பணிகளை  ஆற்றுகின்றனர். அவர்கள் பிறர் துணையின்றி செயல்பட, உடல்நலம் பேணுதல் மிகவும் அவசியம் என்றார். 


ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதர்வர் சித்திரா பேசுகையில்: 
பெண்கள் வாழ்வில் உண்மை, விடாமுயற்சி, வலிமை, ஆளுமைத் தன்மை போன்ற பண்புகளை தக்க வைத்துக்கொண்டால், வெற்றியை நிலைநாட்ட முடியும் என்றார். 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மகேஸ்வரி அணைத்து விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். அனைத்து போட்டிகளிலும் சிறந்த விளையாட்டு அணியாக இண்டிகோ அணி வெற்றிவாகை சூடியது. அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை பட்டத்தினை இண்டிகோ அணியின் வீராங்கனை ஜனனி பெற்றார். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை நீலநிற அணியின் ஜெய ஸ்ரீ பெற்றுக் கொண்டார்.


இறுதியில் மாணவர் மன்றத் துணை செயலர் ஐஸ்வர்யா நன்றியுரை கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...