சசிகுமார் கொலை: சிபிசிஐடி போலீஸ் சந்தேகிக்கும் நான்கு நபர்கள்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 8 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

ஆனால் காவல் துறையினர் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறை விசாரணைக்கு மாற்றி காவல் துறை தலைவர்ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து கோவைக்கு வருகை தந்த சி.பி.சி.ஐ.டி பிரிவுஏ.டி.ஜி.பி கரண் சின்ஹா மேற்கு மண்டலகாவல் துறையினரிடம் வழக்கு தொடர்பானஆவணங்களை பெற்றுக் கொண்டு விசாரணையை துவக்கினார். இதையடுத்து சசிகுமார் செல்போன் அழைப்புகள் மற்றும் கொலை நடந்த நாளான்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து சுப்பிரமணியபாளையம் வரை சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடந்தி வந்தனர். 

இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சசிகுமார் கொலை வழக்கில் சந்தேகப்படும் படியாக நடமாடிய நபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான முக்கியமான 14 புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி காவல் துறையினருக்கு தெரியபடுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள காவல் துறையினர், [email protected] மின்னஞ்சல் முகவரியிலும் தெரியபடுத்தலாம் என அறிவித்துள்ளனர்.











Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...