5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


கோவையில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வளர்ப்பு தந்தையை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னையை சேர்ந்த உஷா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இவாஞ்சலின்  என்கிற ஐந்து வயது  மகள் உள்ளது.  இந்நிலையில் உஷா, சென்னையில் மகேந்திரன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் குழந்தையோடு கோவை காட்டூர் ராம்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் உஷா வேலை நிமித்தமாக குழந்தையை மகேந்திரனிடம் ஒப்படைத்து விட்டு ஊருக்குசென்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த திங்களன்று இரவு மயக்கநிலையில் இவாஞ்சலினை உடல்நிலைசரியில்லை என்று கோவை அரசு மருத்துவமனைக்கு மகேந்திரன் கொண்டு வந்துள்ளனர். உடலில் காயங்களோடு இருந்த இவாஞ்சலின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த சிறிது நேரத்தில் இறந்துள்ளது.  

இதனைத்தொடர்ந்து இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து காந்திபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரனைமேற்கொள்கையில் வளர்ப்பு தந்தை மகேந்திரன் தலைமறைவாகியிருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னைக்கு தப்பிக்க முயன்ற மகேந்திரனை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.  இதை தொடர்ந்து மகேந்திரன் மீது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  ஐந்து வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுகொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...