மேத்யூ புயல் எதிரொலி: புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி: ஒபாமா அறிவிப்பு

புளோரிடா: 'மேத்யூ' புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கவிருக்கிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

"மேத்யூ' புயல்:

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய "மேத்யூ' புயல் லத்தீன் அமெரிக்க நாடான ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. இப்புயலுக்கு இதுவரை 140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் மேத்யூ புயல், அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை நேரத்தில் புளோரிடாவை தாக்க உள்ளது. இனையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எமர்ஜென்சி அறிவிப்பு:

இந்நிலையில் மேத்யூ புயல் காரணமாக, புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். புளோரிடாவை தொடர்ந்து மேத்யூ புயல் தென் மற்றும் வட கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...