பழங்குடி மக்களின் நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்களுக்களின் நிலத்தை அபகரித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




கோவை, ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக 43 ஏக்கர் நிலம் உள்ளது. இது பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டது என்றும், நிலத்தை ஈஷா யோகாவினர் அபகரித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராமத்தை சேர்ந்த100க்கும் மேற்பட்டோர் , கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இது குறித்து வழக்கறிஞர் பன்னீர் செல்வம் செய்துயாளர்களிடம் பேசுகையில் :- 
அரசுக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதை ஈஷா யோகா அமைப்பை சேர்ந்தவர்கள் அபகரிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எழுத்து பூர்வமாக நாங்கள் இனி அந்த நிலத்தை உபயோகிக்க மாட்டோம் என்று அந்த அமைப்பினர் எழுதி கொடுத்தனர். ஆனல் தற்போது, அங்கு கட்டிடங்களை அனுமதியின்றி கட்டி வருகின்றனர். பழங்குடி மக்களுக்கான அரசு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து தனியாருக்கு கொடுத்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு 2 செண்ட் இடம் என்று பிரித்து கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...