கர்நாடக அணைகளில் 2வது நாளாக ஆய்வு

பெங்களூரு : கர்நாடக அணைகளை காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு 2-வது நாளாக இன்று ஆய்வு செய்கிறது. ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாண்டியா மாவட்டம் சென்ற நிபுணர் குழுவினர், ஹம்ரஅல்லி மற்றும் தைலுரு ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆணைத்தொட்டி, ஆவேரிப்பள்ளி கிராமங்கள் மற்றும் மாலவல்லி தாலுக்காவில் காவிரி நீர் பாசனப்பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்நிலையில் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளை அந்த குழு இன்று ஆய்வு செய்கிறது. தொழில்நுட்ப குழுவினர் இன்று இரவு மேட்டூர் வருகின்றனர். மேட்டூர் அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளை அவர்கள் நாளை ஆய்வு செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப குழு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் திறப்பது மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை நாளை ஆய்வு செய்ய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பாசனப்பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி. எஸ். ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை வரும் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.  

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...