ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சோதனை செய்ய விஎஓ உத்தரவு


ஆயுத பூஜை உள்ளிட்ட பல்வேறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம் பண்டிகைகள் ஆக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கட்டணம் குறைவாக வசூலிக்கும் அரசுப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வேறு வழியின்றி பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் ஆம்னி பேருந்துகள், தங்களின் பயணக் கட்டணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகளவில் கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. வேறு வழியின்றி பயணிகள் அதில் பயணம் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் 300 முதல் 400 வரை வசூலிக்கும் ஆம்னி பேருந்து தற்போது 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது.

இதனிடையே ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை குறித்து தொடர்ந்து வந்த புகாரை அடுத்து வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...