கோவையில் இளம் ஜோடி ஒன்று மதுபோதையில் தள்ளாடியபடி ரகளை ரயில் நிலையம் அருகே கான்போரை முகம்சுளிக்க வைத்தது.



கோவை ரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று மதுபோதையில் தள்ளாடியபடி ரகளையில் ஈடுபட்ட காட்சி காண்போரை முகம்சுளிக்க வைத்தது. தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பல்வேறு கட்சிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வரும் நிலையில், தினத்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் மதுபோதைக்கு நாளுக்கு நாள் அடிமையாகிவருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை இரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று ஆண், பெண் என்ற பேதமின்றி மதுபோதையில் தள்ளாடியபடி நடத்து சென்று அப்பகுதியில் செல்வோரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இருவரும் அங்கிருந்த ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் வாகனஒட்டிகளிடம் அநாகரிகமாக நடத்துக்கொண்டதும் மது மயக்கத்தில் அந்த இளம்பெண் சாலை ஒர சுவற்றில் மோதி, சரிந்துவிழும் காட்சிகளும் காண்போரை முகம்சுளிக்க வைத்தது. இதையடுத்து அங்குதிரண்ட கூட்டத்தில் ஒரு சிலர் அப்பெண்ணை தூக்க முற்பட்டதால் ஆத்திரம் அடைந்தஅவருடன் வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தநிலையில் அவ்விருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர். கோவை மாநகரின் முக்கிய இடமான ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...