கோவையில் கலைகட்டிய தாண்டிய நடனம்

ஆர்.எஸ் புரம் பகுதில் உள்ள கோயமுத்தூர் குஜராத் சமாஜ் கலையரங்கில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. 2016ம் ஆண்டு குஜராத் சமாஜ் சிறப்பு ஆண்டாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை குஜராத் சமாஜ் 75ம் ஆண்டு விழா கொண்டப்பட்டது. ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளில் போதும், கோவையில் உள்ள குஜராத்  இனமக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது இதில் சிறப்பாகும். தற்போது 11 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோயமுத்தூர் குஜராத் சமாஜத்தில் கொண்டாப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வுகளாக தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சி, பற்றி கோயமுத்தூர் குஜராத் சமாஜ் நிர்வாகி கூறுகையில்: இந்நிகழ்விற்காக, கடந்த 2 மாதங்களாக குஜராத் சமாஜ் திட்டமிட்டுள்ளது. பொதுவாக குஜராத்திய முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படும் தாண்டிய நடனம் மற்றும் ராஸ் கார்பா போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் நவராத்திரி பண்டிகை முழுமை பெறாது. குஜராத்திலிருந்து இடம்பெயர்ந்த குஜராத்தியின மக்கள் கோயமுத்தூரை தங்கள் தாய் வீடாக கருதிகின்றனர். இதை 100க்கும் மேற்பட்டோர் கோயமுத்தூர் குஜராத் சமாஜ் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையின் போது அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய உடை அணிந்து உணவுகளை பரிமாறி கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாக்கள் கோயமுத்தூர் குஜராத் சமாஜத்தில் கொண்டாப்பட்டு வருகிறது.



இந்நிகழ்ச்சியின், முக்கிய நிகழ்வுகளான நடன நிகழ்ச்சிகள் உணவுக்கு பின் நடைபெறும். இதில் வயது பாலின வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் குஜராத்திய பாரம்பரிய உடைகள் அணிந்தது கொண்டாடுவர். ஆண்கள் மோடி உடை பெரும்பாலும் அணிந்து  கொண்டாடினார். பலவகை வண்ண உடைகளில் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை அனைவரையும் கவர்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...