திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


Tirupur: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமீமுன் அன்சாரி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் என்பவர் சமூக வலைதளங்களில் தமீமுன் அன்சாரி மீது அவதூறுகளை பதிவு செய்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.



இதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பலர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில், தடா ரஹீம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக பதிவிட்ட தடா ரஹீம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...