திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


Tirupur: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமீமுன் அன்சாரி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் என்பவர் சமூக வலைதளங்களில் தமீமுன் அன்சாரி மீது அவதூறுகளை பதிவு செய்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.



இதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பலர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில், தடா ரஹீம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக பதிவிட்ட தடா ரஹீம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...