வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வாலாங்குளம் தூர்வார நடவடிக்கை

கோவையை சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு (ஈசிஜி) என்ற தன்னார்வ அமைப்புகள்  வாலாங்குளம் ஏரி மற்றும் பெரியகுளம் ஏரியை பராமரிக்கும் வகையில் தத்தெடுத்துள்ளனர். வாலாங்குளம் ஏரி தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக வாட்ஸ் ஆப் குழு நம்ம கோவை மூலமாக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் விஜயகார்த்திகேயன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த தகவல் மூலமாக  மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக  கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் முகமது சலீம் பேசுகையில்: திருச்சி சாலையில் அருகே உள்ள சிஎஸ்ஐ சர்ச் வாலாங்குளத்தில் குப்பைகொட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த தேவாலயத்தில் இது தொடர்பாக பல்வேறு முறை கூறப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தமால் தேவாலயத்தில் உள்ள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த தேவாலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாக்களிலும் மீதமாகும் எஞ்சிய உணவுகள், இலைகள், குப்பைகள் ஆகியவற்றை இந்த குளத்தில் கொட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேவாலயம் 73வது வார்டு பகுதிக்குட்பட்டது. இப்பகுதியில் மாநகராட்சி குப்பைக் கழிவுகளை வெளியேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இந்த தேவாலயத்தில் இருந்து குளத்திற்கு ஒரு வழி அமைத்து இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி வழிவகுக்க வேண்டும்.

இந்தமாதம் அக்டோபர் 20 அல்லது 22ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. அதற்குள் இக்குளத்தை தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.

இந்த புதிய முயற்சியில், கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவிற்கு கையுறைகள் மற்றும் முகமூடிகள் போன்ற பொருட்கள் வழங்கிட பல்வேறு அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  உதவ முன்வந்துள்ளனர். 

இந்த வாலாங்குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் மற்றும் உதவும் கரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் முகமது சலீம்-9787878910 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...