பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை

லண்டன்: பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஹேக்கர்கள்

ஆப்பிள் வாட்சுகள் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக உலகம் முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்ததாகக் கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, உலகின் முன்னணி தடகள வீரர்கள் சிலரின் மருத்துவ அறிக்கைகளையும் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்து, இன்டர்நெட்டில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை

இந்நிலையில் பிரிட்டன் பிரதமராக தெரேசா மே பதவியேற்ற பின், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் ஆப்பிள் வாட்ச்சும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்க்கக்கூடும் என்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக டேவிட் கேமரூன் பிரிட்டன் பிரதமராக இருந்த போது அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கொண்டுவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...