தனியார் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிவைத்து கொள்ளை

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனம் உள்ளது. இந்த கொரியர் நிறுவனம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கொரியர் சர்வீஸ் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தில் இரண்டு ஊழியர்கள் இரவு நேரத்தில் பணியாற்றி இருந்தனர், அப்போது ஒரு ஊழியர் வெளியே சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.9.50லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 



இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் புலியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை துணை ஆணையாளர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.



மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கொரியர் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காமெராவின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...