விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடிய வழக்கு: இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் கைது

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 5ஆம் திருப்பூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. 

அப்போது, அங்கேரிபாளையம் சாலையில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் பின்னலாடை நிறுவனத்தில் அத்துமீறி விநாயகர் சிலையுடன் புகுந்த இந்து முன்னணியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் சதுர்த்தியின் போது நன்கொடை  தரமறுத்ததாக  தெரிவித்து  கற்களைக் கொண்டும் இரும்பு கம்பிகளை கொண்டும் தாக்கினர் இதில் பின்னலாடை நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் பூந்தொட்டிகள் சேதமடைந்தன மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் தாக்கினர் இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  

இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த இருபது பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனடிப்படையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் கார்த்திக் ,  ராதா கிருஷ்ணன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முன்னணியின் இத்தகைய செயல்பாட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகின்ற 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...