இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

அருந்ததியினருக்காக வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டு மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் 60,000க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடில்லாத ஏழை அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை வேறு சிலருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

எனவே, விவசாய மற்றும் வீடு கட்டுவதற்கு தேவையான நிலத்தை வழங்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் வெண்மணி கூறியதாவது: நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 1000 ஏக்கர் நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியில் அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது. அதில், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா பிரித்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குமேலும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தவறினால் மேற்குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...