சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் சுமார் 500-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரிட இன்னல் குறைப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெரும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வ.உ.சி மைதானத்தை சென்றடைந்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் நாள் சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, தீயில் இருந்து பாதுகாத்துகொள்ளுதல் ஆகிய சம்பங்களிலிருந்து பொதுமக்கள் எந்தவித பாதிப்புமின்றி தங்களை காத்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியதையொட்டி மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் முழுமையாக கண்காணித்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்குவதை முன் கூட்டியே தெரிந்து தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் அளவிற்கு வாய்க்கால் பகுதிகளை சீர் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் வகையிலும் மற்றும் பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்தி எல்லோரும் சுகாதாரத்தை பாதுகாத்திடவும் மேலும் பொதுமக்கள் அனைவரும் பேரிடர் காலங்களில் தன்னைத்தானே காத்துக்கொள்வது மட்டுமின்றி குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரை எந்தவித பாதிப்புமின்றி பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார். 

இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சிதம்பரம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...