தமிழக நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமனம்: மத்திய அரசு முடிவு?

டெல்லி: தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் என உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து வித்யாசாகர் ராவ், செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநராக பதிவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் உடல்நலம் தேறி வந்தாலும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல்வர் வகித்துவந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் எனவும், அவர் தற்போது வகித்து வரும் மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்புக்கு கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...