மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,237 கனஅடியில் இருந்து 4,253 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 67.38 அடியாகவும், நீர் இருப்பு 30.49 டிஎம்சியாகவும் உள்ளது.அணையில் இருந்து சாகுபடிக்கு நீர் திறப்பு 18,000 கனஅடியாக உள்ளது.


கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகரில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு கடந்த 20-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி வரை மேலும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீர்வரத்தைவிட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. 
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...