முதல்வர் உடல்நலம் பற்றி பேசிய வழக்கில்- மக்கள் சிவில் உரிமை மனு

முதல்வர் உடல்நலம் பற்றி பேசியதாக கோவையில் சமீபத்தில் இரு வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களின் தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் என மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

முதல்வர் உடல்நலம் பற்றி அவதூறு பேசியதாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த இரு வங்கி உழியர்களான சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

பின்னர், மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆளும் கட்சியை திருப்திபடுத்தும் நோக்கில் காவல் துறையினர் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகவும், இருவர் பேசியதற்காக கைது செய்யப்படுவது என்பது தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் செயல் எனவும், இந்த இருவர் கைது சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு இருவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் பாலமுருகன் வலியுறுத்தினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...