காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ரயில் மறியல் - ஸ்டாலின் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் அழைப்புவிடுத்திருந்தனர். இந்த மறியல் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

அதன்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டம் திங்களன்று (இன்று) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டை தேரடி ரயில் நிலையத்திலும், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் ரயில் நிலையத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பெரம்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரெங்கநாதன் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினரை கைது செய்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...