சென்ட்ரல், கோயம்பேடுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.13 மணியளவில் மொபைல் நம்பர் ஒன்றில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் கிடைத்தது. அதில், போலீஸ் பிடித்து வைத்திருக்கும் ஐஎஸ்எஸ்எஸ் சம்பந்தப்பட்ட நபர்களை அடுத்த 42 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த எஸ்எம்எஸ் தமிழில் வந்துள்ளது. 2 முறை இந்த எஸ்எம்எஸ் வந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ரயில்வே ஸ்டேசனின் அனைத்து நடைமேடை, சரக்கு பெட்டக அறை உட்பட எல்லா பகுதிகளும் துப்புரவாக ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையின் முடிவில், எஸ்எம்எஸ்ஸில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த மொபைல் எண் யாருடையது, எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கின்றனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...