கோவையில் திமுக பிரமுகர் வீட்டில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்



கோவை: கோவை வடவள்ளி பகுதியில் திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த இருவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி வருவதாக எழுந்த புகாரின்பேரில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரில் தி.மு.க. பிரமுகர்

ஆனந்தனுக்கு சொந்தமான

சொகுசு பங்களா ஒன்று உள்ளது. 

இவர் இந்த பங்களாவை ஷேக் மற்றும் ரசித் ஆகிய இருவருக்கும் வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் இவர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பங்களாவில் பதுக்கி வைத்து, பல்வேறு வகையில் பண மோசடிகள் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அந்த பங்களாவிற்கு அடிக்கடி சந்தேகத்திற்குரிய நபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இப்படியிருக்க இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய புலனாய்வுத் பிரிவினர் கோவை மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் அந்த பங்களாவில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 268 கட்டுகள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பழைய ரூபாய் கட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல திமுக பிரமுகர் ஆனந்தனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசார் சோதனைக்காக வந்த பொழுது தப்பிச்சென்ற இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...