கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர் ஹரி சங்கர் (28) உயிரிழந்தார். காரில் பயணித்த இரண்டு இளைஞர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் காரில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அன்னூர் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர் (28) என்பதும், Driver ஆக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

தற்போது அந்த விபத்தில் CCTV காட்சிகளும் வெளியாகி உள்ள நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தமிழரசனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த முழுமையான விவரங்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அன்னூர் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர் (28) என்பதும், Driver ஆக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
தற்போது அந்த விபத்தில் CCTV காட்சிகளும் வெளியாகி உள்ள நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தமிழரசனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த முழுமையான விவரங்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்தனர்.