வீர மரணமடைந்த காவலர்களுக்கு இன்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அன்று பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடுமுழுவதும் உள்ள காவலர்களுக்கு வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது. 

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன  ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

இதனை அடுத்து இன்று, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருக்கும் வீரவணக்க நாள் நினைவிடத்தில் டிஜிபி ராஜேந்திரன், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் நினைவாக இந்த வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது. மேலும், தலைநகர் தில்லியிலும் சானக்கியாபுரி பகுதியில் உள்ள காவலர்கள் நினைவிட மைதானத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...