மாணவியை கேலி செய்த சக மாணவர்கள்: அவமானத்தில் தந்தை தற்கொலை முயற்சி!


கோவை: நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பஞ்சாயத்து நால் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி தின கூலி வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினரின் மகள் காயத்திரி அங்கு உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு பயிலும் சக மாணவர்கள் காயத்திரியை கேலி செய்தும் அவமானபடுத்தியும் மன உளைச்சலுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து முருகன் அந்த மாணவர்களை கண்டித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் முருகனையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முருகன் குற்றம்சாட்டினார். மேலும் இதுகுறித்து க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மனு ஏற்கபடாததால் மனமுடைந்த முருகன் கடந்த செவ்வாய்கிழமை எறும்பு பொடியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தவரை மருத்துவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.



ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்களால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாததால், எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என கூறி அரசு மருத்துவமனைய வளாகத்தின் உள்ளே தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...