அமலாக்கப்பிரிவு புதிய இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமனம்

டெல்லி: அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதிவரை இப்பதவியில் இருப்பார்.

அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, இதற்கான ஒப்புதலை அளித்து இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கர்னல் சிங், 1984 -ம் ஆண்டு யூனியன் பிரதேச பிரிவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானவர். மத்திய அமலாக்கத்துறை இயக்குநராக இருந்து வந்த ராஜன் எஸ்.கட்டோச் நீக்கப்பட்ட பின்னர் அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குனராக கர்னல் சிங் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து அமலாக்கப்பிரிவு இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓய்வு பெறும் நாளான அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதிவரை இப்பதவியில் இருப்பார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...