ஊத்துக்குளி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து.



ஊத்துக்குளி அருகே உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் சென்ற லாரி அடுத்தடுத்த 5 வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம். 



வட மாநிலத்தவருக்கு சொந்தமான லாரியை அதன் டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்துள்ளதாக தெரிகிறது. செங்கப்பள்ளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற இரண்டு கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் இவற்றின் மீது மோதி விட்டு நிற்காமல் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசுபேருந்தின் மீது மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்தும், அதன்பின்னர் அந்த லாரி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றதாகவும் தெரிகிறது. 

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனார். விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு மண்டல காவல் ஆய்வாளர் பாரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...