ஊத்துக்குளி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து.



ஊத்துக்குளி அருகே உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் சென்ற லாரி அடுத்தடுத்த 5 வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம். 



வட மாநிலத்தவருக்கு சொந்தமான லாரியை அதன் டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்துள்ளதாக தெரிகிறது. செங்கப்பள்ளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற இரண்டு கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் இவற்றின் மீது மோதி விட்டு நிற்காமல் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசுபேருந்தின் மீது மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்தும், அதன்பின்னர் அந்த லாரி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றதாகவும் தெரிகிறது. 

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனார். விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு மண்டல காவல் ஆய்வாளர் பாரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. 

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...