ஓரினசேர்க்கையை ஊக்குவிக்கும் ''திரைக்கு வராத கதை''க்கு தடை கோரி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உஷேன். ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தினை தடைசெய்யக் கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து ஜாகிர் உஷேன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

''கடந்த 28ம் தேதியன்று திரைக்கு வந்த படம் ''திரைக்கு வராத கதை''. துளசி ராஜ் இயக்கத்தில் கே.மணிகண்டன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இனியா, நதியா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது பெண்கள் ஓரினசேர்க்கையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற படங்களை வெளியிட்டால் சமூக பிரச்சனைகளான கள்ளத் தொடர்பு, விவாகரத்து உள்ளிட்டவை அதிகரிக்கும். சமீபகாலமாக பெண் குழந்தைகள் அதிகப்படியாக பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியாகியுள்ளது பெண்களின் மீதான சமூகச் சிக்கலை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும். இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கையைக் கொண்டு இயக்கப்பட்டுள்ள ''திரைக்கு வராத கதை'' திரைப்படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்'' என கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...