கோவை மாநகராட்சி ஆணையாளரை பசுமைத்தீர்ப்பாயம் நேரில் ஆஜராக உத்தரவு !



கோவை வெள்ளளூர் குப்பைக்கிடங்கு அமைந்துள்ள பகுதியில் குடிநீர் மாசுபடுவதையொட்டி அளிக்கப்பட்ட புகாரில் நேரில் ஆஜராகாத கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு தென் மண்டலபசுமைத்தீர்ப்பாயம் இன்று நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூரில் ஆயிரக்கணக்கான குடியிருப்பகள் உள்ளது. இதில் கோவை மாநகராட்சியின் 600 ஏக்கர் நிலப்பரப்பளவில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் கோவை மாநகரட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் கொட்டப்படுவதால்   நோய் பரப்பும்  ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் படையெடுப்பால் இங்குள்ள மக்கள் பெரும் உடல் உபாதகைகளுக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த குப்பைக்கிடங்கில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியாகும் நட்சுக்களால் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர், ஈஸ்வரன் பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் விசாரனைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு உத்தரவிட்டது. தொடர்ச்சியாக மூன்றுமுறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகதாதால் திங்களன்று விசாரனை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நவம்பர் 23 தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...