ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகனம் நிறுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.புரம் சாலையோரத்தில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதனன்று (இன்று) நடைபெற்றது.



இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் முதற்கட்டமாக ஒத்திகையாக ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது நடைமுறைக்கு வருகிறது. மாநகராட்சி சார்பாக சாலைக் குறியீடு அமைத்தல், சாலையோரம் இருபுரங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும். சாலையோர பணிகளில் ஈடுபடும் போது காவல் துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறினார். 

இக்கூட்டத்தில், காவல் உதவி ஆணையர் மகுடபதி, வியாபார நிறுவன உரிமையாளர் அன்னபூரணா சீனிவாசன், ரவிசாம், ஹேமா கண்ணா, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...