பணத்தை திருட முயன்றவர் கைது

திருப்பூர் மாவட்டம், திருமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (52). புதனன்று கோவைக்கு வந்துள்ளார். அப்போது உணவு உண்பதற்காக அவிநாசி சாலையில் உள்ள ஒரு உணவகம் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உணவகத்தின் உள்ளே சென்றுள்ளார். 

இதனிடையே, இவரது காரில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை மர்மநபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அர்ஜூனன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரைப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...