கிராம பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்

கோவை: சின்னியம் பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைக்கோலபாளையம் கிராமத்தில் 4 வது வார்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட சாக்கடைக் கால்வாய் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது. 

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழ்நிலையில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைதுவிடாமல் தடுக்கும் வகையில் கால்வாய் தூர்வாரப் படவேண்டும் என்ற நிலையில், இளைஞர் ஆர்.தினேஷ்குமார் என்பவர் முயற்சியில் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். 

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 500 மீட்டர்தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் நீர் வெளியேற இடையூறாக இருந்த மிகப்பெரிய பாறை இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றப்பட்டு அருகில் இருந்த சின்னப்பள்ளத்துடன் கால்வாய் இணைக்கப்பட்டது. 

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...