கோவையில் தொடரும் யானைகள் மரணம்- அதிர்ச்சியில் வன ஆர்வலர்கள்


கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியானது நீர்நிலைகள் நிறைந்த, அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு, யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 

இந்நிலையில், வியாழனன்று அப்பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இறந்துள்ள யானைக்கு சுமார் ஒரு வயது மட்டுமே இருக்கும் என்றும், யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உண்மைத் தகவல் தெரியவரும் என்றனர்.



கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று இப்பகுதியின் அருகாமையில் கைவிடப்பட்ட ஒரு குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அந்த யானை உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...