இந்து பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் கலவரம்- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த சசிக்குமார் (36) கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் அவ்வமைப்பினரால் கலவரங்கள் ஏற்பட்டன. கடைகள், வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் வாகனங்களுக்கு தீ வைத்து கொழுத்தி அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸ் வாகனமும் இறையாகியது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சிலருக்கு மட்டும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. மேலும், சிலரது மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. 

இந்நிலையில், சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின் தொடர்பாக தற்போது என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், சக்திகுமார், மோகன்ராஜ் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...