மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!


மேற்குத் தொடர்ச்சி மலையினை இயற்கை மாறாமல் பாதுகாப்பது குறித்து வரும் 6ம் தேதியன்று கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஓசை தன்னார்வ அமைப்பினருமான க.காளிதாசன் கூறியிருப்பதாவது:-

நமது வாழ்வாதாரமான மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பை வலியுறுத்தி ஆறு மாநிலங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தொடர் செயல்பாடுகளை நாம் அறிவோம். அதன் விளைவாக அமைக்கப்பட்ட மாதவ் காட்கில் குழு, கஸ்தூரிரங்கன் குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் நமது அரசுகளால் கவனிக்கப்படாது புறந்தள்ளப்பட்டுள்ளன. 

இச்சூழலில் நாம் அடுத்து செய்யவேண்டியது குறித்தும், பிப்ரவரி 2017ல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மேற்கு மலை பாதுகாப்பு கூட்டமைப்பின் சந்திப்புப் பற்றியும் கலந்துரையாட இம்மலை பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகளான குமார் கலானந்த் மணி, பாண்டுரங்க ஹெக்டே ஆகியோர் வரும் நவம்பவர் 6ம் தேதியன்று (ஞாயிறு) கோவைக்கு வருகைதர உள்ளனர். 

அன்றைய தினம், காலை 10.30 மணியளவில் கிரே டவுன், நேரு விளையாட்டரங்கம் அருகில் அமைந்துள்ள ஜி.டி.நர்சரி பள்ளி வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்று நமது மலையின் பாதுகாப்பிற்கான தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம். மேற்கு மலைத்தொடரை பாதுகாக்காமல் நம் எதிர்காலம் இல்லை என்பதை நாம் இணைந்து வலியுறுத்துவோம், மேலும் தகவலுக்கு 9443022655 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...