வால்பாறை குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் சில மாதங்களாக மழையின்றி வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் அடர்ந்த வனப்பகுதியில் வறட்சி நிலை இன்னும் சீராகாததால் யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீருக்காக பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேதம் செய்து வருகின்றது. 

இந்நிலையில், வால்பாறைக்கு உட்பட்ட காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அப்பகுதியில் இருந்த ரேஷன் கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அரிசி மூட்டையை இழுத்து சேதம் செய்ததுடன் அப்பகுதியிலேயே தற்போது முகாமிட்டுள்ளது. 



அதேப்போல், கருமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட மேலாளரான தில்லை என்பவரின் வீட்டின் கதவை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தக் காட்டுயானையை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். 

மேலும், பன்னிமேடு, வாகமலை, சோலையார், அக்காமலை, சிறுகுன்றா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...